வெள்ளி, 23 அக்டோபர், 2020

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?


இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப் பெரிய, மிக உயர்ந்த, மாபெரும் மலைத்தொடர் இந்த இமயமலைத் தொடர்தான். எப்பொழுதும் உறைபனி மூடி இருக்கும் இமயமலைப்பகுதி 15000 பனியாறுகளைக் கொண்டுள்ளது அதில் 12000 கன கிலோ மீட்டர் தண்ணீர் உள்ளது. இமயமலை வெப்ப மண்டலத்திற்கு அருகே இருந்தாலும் அதன் உயர் பகுதிக்குள் ஆண்டு முழுவதும் பனி நிறைந்து காணப்படுகிறது. இது பல வற்றாத ஆறுகளின் ஊற்றாகத் திகழ்கிறது. சிந்து நதி, கங்கை நதி, பிரம்மபுத்ரா, ஐராவதி மற்றும் யாங்சிகீ போன்ற ஆறுகள் முதன்மையானவைகளாகும்.

சனி, 5 மார்ச், 2016

மேகம் எனும் சொல் எவ்வாறு பிறந்தது?



தமிழில் மேகத்தை சுமார் 75 சொற்கள் குறிக்கின்றன.

அவை

அப்பிதம், அப்பிரம், அமுதம், அம்புதம், அம்போதரம், அவி, ஆயம், இளை, எழிலி, கங்கைதூவி, கதம்பம், கந்தரம், கமஞ்சூல், கம், கரு, கார், காளிகம், குயின், குயில், கொண்டல், கொண்மூ, சலதம், சீதம், செல், சோனம், தாராதரம், தையல், தோயதரம், நாகம், நீகம், நீரதம், பயோதம், பயோதரம், பரிசன்னியம், பருச்சனியம், பாட்டம், பாரணம், புதம், புயல், பெயல், பே, பேகம், பேசகம், மகாநாதம், மங்குல், மஞ்சு, மாகம், மாசி, மாசு, மாரி, மிகிரம், முகில், முதிரம், மெய்ப்பிரம், வனமுதம், வானம், வான், வாரிதம், வாரிநாதம், வாரிவாகம், வார், விசும்பு, விண், விண்டு, வெள்ளைநோய்

வியாழன், 25 பிப்ரவரி, 2016

இந்தியாவில் படித்தவர்களுக்குப் பற்றாக்குறையா?


Image

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்




  • மருத்துவம் படிக்காத அனுபவ மருத்துவரிடம் நமக்கு மருத்துவம் செய்யப் போவோமா? போகமாட்டோம்! - காரணம் அவர் மருத்துவம் கல்லாதவர். அப்படியே அவர் மருத்துவம் செய்தாலும் அது தவறு என்று சொல்வோம்.

  • வழக்கறிஞர் பணிக்குப் படித்த ஒருவரை பொறியியல் பணிக்கு ஏற்றுக்கொள்வோமா? என்றால், ஏற்றுக்கொள்ளமாட்டோம். - காரணம் அவர் நீதித்துறைக்கு படித்தவர் பொறியியல் துறைக்கு ஏற்க முடியாது என்போம்.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

ஆங்கில மோகம் இப்படியெல்லாம் பேச சொல்லுமா?




நண்பர் ஒருவர் இளங்கலை பட்டம் படித்தவர், நல்ல பணியில் நல்ல சம்பளத்தில் வேலை பார்ப்பவர். வழக்கம்போல நல்லதொரு வாழ்க்கை துணையை தேடி தனது திருமணத்திற்கு பெண் பார்க்கும் படலத்தில் பெற்றோர்களுடன் களமிறங்குகிறார்.

பிரீடம் - 251 செல்பேசியும் அதன் விளம்பர உத்தியும்





தற்போது அதிகம் பேசப்படும் ஒரு செய்தி பிரீடம் - 251 என்ற செல்பேசியும் அதன் விலையும் தான். இந்திய ரூபாயில் 251 அதாவது அமெரிக்க மதிப்பில் சுமார் 3.675 டாலருக்கும் குறைவான விலையில் இந்த செல்பேசி விற்கப்படுகிறது. அமெரிக்காவில் விற்கப்படும் சாதாரண பர்கர் ஒன்றின் விலையைக் காட்டிலும் குறைவான விலையில் இந்த செல்பேசி விற்கப்படுவதற்கான காரணங்கள் என்ன? என்று அலசும்போது இந்த செல்பேசியை தயாரித்து விற்பதாகச் சொல்லிக்கொள்ளும் ரிங்க்பெல்(RingBell) நிறுவனத்தின் விளம்பர உத்தியை உணரமுடிகிறது.

வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

இந்தி ஒரு மாசடைந்த மொழி - இந்தியை தாய்மொழியாகக் கொண்ட மொழியியல் ஆய்வரின் கருத்து



இந்தியை தாய்மொழியாகக் கொண்ட மொழியியல் ஆய்வர் ஒருவரின் கருத்தைப் பாருங்கள். இந்தி என்பது ஒரு மாசடைந்த மொழி இதை வளர்க்க நினைப்பதோ அல்லது பரப்ப நினைப்பதோ கேவலம் என்ற தொனியில் அவரின் பதிவு அமைந்துள்ளது.

Wind - விண்டு என்பது தமிழ் சொல்லே



ஆங்கிலத்தில் Wind என்பதற்கான பொருள் - Wind is the flow of gases on a large scale, அதாவது வளிமங்கள் பெருமளவில் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு நகரும் நிலையைக் குறிப்பதாகும்.

துப்பாக்கி மற்றும் பீரங்கி தமிழ்ச்சொற்களே



துப்பாக்கி மற்றும் பீரங்கி போன்றவை இராணுவத்தில் மிகவும் முதன்மையான ஆயுதங்கள், இரண்டுமே வெவ்வேறான ஆயுதங்கள். இவற்றை சுமார் 1000வது பொது ஊழி ஆண்டில் சீனர்கள் பயன்பாட்டில் கொண்டிருந்தனர். இந்த நுட்பமானது 12 ஆம் நூற்றாண்டுகளில் ஆசிய நாடுகளுக்கும், 13 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியதாகச் அறிஞர்கள் கூறுகின்றனர்.

சனி, 26 டிசம்பர், 2015

தமிழ் ஆங்கிலம் போல ஏற்றம் பெற ஒரேயொரு எளிய வழி



ஒருவர் ஒரு மணிநேரம் ஆங்கிலத்தில் பேசினால் தமிழனிடம் சொத்தை எழுதி வாங்கலாம். அதே ஒரு மணிநேரம் ஒரு வெள்ளைக்காரன் பேசினால் தமிழனிடம் மொத்தத்தையும் எழுதி வாங்கலாம். இந்த ஒப்பு எதற்கு என்றால் அந்தளவிற்கு ஆங்கில மோகம் தமிழ்நாட்டில் வளர்ச்சியடைந்துள்ளது.

வியாழன், 9 ஜூலை, 2015

சகரச்சொற்கள் யாவும் வடமொழி சொற்கள் எனும் நம்பிக்கை



தொல்காப்பியம் இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் தமிழ் இலக்கண நூலாகும். தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர். பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே.

இதில் தமிழ் சொற்கள் இவ்வாறு தான் வழங்கப்பட வேண்டுமென்ற ஒரு வ(ழி)ரைமுறை உள்ளது, அதாவது 


க த ந ப ம எனும் ஆவைந்தெழுத்தும்

எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே - தொல். மொழி. 28

சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே

அ, ஐ, ஔ என்னும் மூன்றலங் கடையே - தொல். மொழி. 29
மேலே உள்ள பாடலுக்கு என்ன பொருள் என்றால், "க, த, ந, ப, ம ஆகிய ஒலிகள் எல்லா உயிரோடும் சேர்ந்து மொழி முதல் வரும். சகரமும் அப்படித்தான்; ஆனால் ச, சை, சௌ - அவ்வாறு ஒரு சொல்லும் தொடங்காது. (அலங்கடைன்னா விதிவிலக்கென்று பொருள்)"

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...